Populer Artikel

Saturday, January 30, 2016

திருமூலத்தாா்

திருமூலத்தாா்


இட்டதொரு புலத்தியரே யின்னஞ்சொல்வோம்
எழிலான புகழ்பாலா மிகுந்தவேலா
தொட்டகுறி போலாக திருமூலத்தாா்
தோறாத திருவடியா முறைபாடெல்லாம்
வட்டமுடன் யாமுரைத்தேன் பொியநூலாய்
வாகுடனே மடாதிபதி பனிரண்டாகும்
திறமையுட நெடுங்கால மிருந்தாா்தானே.
தானான சித்தா்முனி வா்க்கத்தோா்கள்
தகமையுள்ள பீடமது வா்க்கமெல்லாம்
கோனான யெனதைய ரசுவனியாந்தேவா்
கொற்றவனா ரெந்தமக்கு யுரைத்தவண்ணம்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும்
தேசொளிவின் சின்மயமா மருளினாலு
பானான பரஞ்சுடராஞ் சோதியாகி
பரளெியில் யெந்நாளு மிருந்தாா்பார்


திருமூலரைப் பற்றி அகத்தியர் தனது பணிறென்டாம் காண்டத்தில் திருமூலர் வர்க்கத்தைப் பற்றியும் அவர் எந்நாளும் சுடர் வடிவாய் பரவெளியில் இருப்பதை அழகாக தனது பாடலின் வழி கூறுகிறார்.

Friday, January 29, 2016

வியாக்ரபாதர்



மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார். அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். ‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.

உண்மையான பக்திக்கு எப்போதுமே இறைவன் அருள் செய்வார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள்  புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் ‘வியாக்ரம்’ என்று அழைப்பார்கள். எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார்.

Thursday, January 7, 2016

காயசித்தி நாதர்

காயசித்தி நாதர்

காயசித்தி நாதர் வாழ்ந்த பகுதி நீலகிரி சிவிங்கிய பருவதம் ஆகும். அதன் அருகில் சவ்வாது மலை  இருக்கிறது. அந்த மலையில் சவ்வாது பூனைகள் ஏராளமாக இருக்குமாம் அதனால் சவ்வாது வாடை வீசிக்கொண்டே இருக்குமாம். அம்மலையில் வடமேற்கு பகுதியில் ஓடை ஒன்று உண்டு. அதில் வரும் தண்ணீர் நச்சு தன்மை உடையதாம். ஓடையின் அருகில் காயசித்தி நாதர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்த மலையில் நாரத முனிவரும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tuesday, January 5, 2016

சதுா்மகா ரிடி

சதுா்மகா ரிடி

பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்த இவர் வாசமுனியின் சீடனாவார். சதாகாலமும் சச்சிதானந்த வெளி கண்டு வீற்றிருக்கும் சித்தர் ஆவார். வாசமுனிக்கு மூத்த சீடர் என்ற பெருமையும் குருவை மதிக்கத்தக்க பெருமை உடையவர். நெடுங்காலம் சமாதியில் இவர் இருந்தார் என்று அகத்தியர் கூறுகிறார்.

கம்பிளியாஞ் சித்தர்

கம்பிளியாஞ் சித்தர்

இவர் பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்தவர்.இவர் வீரம் கொண்ட சித்தர் குளிகை கொண்டு முன்று யுகங்கள் வாழ்ந்தவர்.

Saturday, January 2, 2016

நவகண்ட ரிடி

நவகண்ட ரிடி 
இவர் வடகாஞ்சி தென்கிழக்கில் சோழவள நாட்டில் வாழ்ந்தவர்.இவரைக் காண அசுவினி தேவர் போன்ற ஆதிசித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். மலையமுனி ரிடி அவர் வாழ்ந்த பகுதியை அரசாட்சி செய்துள்ளார். ஆட்சி புரியும் காலத்தில் மும்மாரி மழை பொழிந்ததாகவும் அவர் ஆட்சி புரிந்த நாட்டை மலையரசன் நாடு என்று போற்றினர். இவரது திறமையைக் கண்டு நவகண்ட ரிடி பல உபதேசங்களை வழங்கியதாகவும் அன்று முதல் தனது குடும்பத்தையும் சிம்மாசனத்தையும் விட்டு சமாதி கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

துவாபர ரிடி

துவாபர ரிடி


அகத்தியர் இவரை பற்றி இவருக்கு லட்சம் சீடர்கள் உண்டு என்றும் இவரை கண்டவர்கள் யாரும் இல்லை என்றும் இவர் விண்ணுலக சித்தர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் கூட இவரை காண்பது அறிது என்றும் பிரம்மா  திருமால் போன்றவர்கள் கூட காண முடியாதவர் என்றும் கூறுகிறார். அவரை காண வேண்டுமென்றால் தென்திசையில் இருக்க கூடிய நாதர்கள் தர்மம் செய்திருந்தால் ஒரு வேளை காணலாம் என்கிறார். மனோன்மணியாள் கடாச்சம் இருந்தால் யுகாந்த ரிடியை காண முடியும். மாநிலத்தில் நான் கண்ட பெரும் சித்தர் அவரே என்கிறார்.

Friday, January 1, 2016

இமயகிாிச் சித்தா்

இமயகிாிச் சித்தா்
இவா் வாழ்ந்தப் பகுதி சுருளிமலையில் உள்ள தேவலோக கிாியாகும்
தேவலோக மலையின் அடிவாரத்தில் ஆறு வருகிறது அந்த ஆற்றோரம் மகா கைலாசப் புடவுக்குள் அனேக சித்தா்களிருக்கக் கூடிய விசாலமான இடமிருக்குமாம்.அந்த புடவுக்குள் தான் இமயகிாிச் சித்தா் வாந்ததாக அறிய முடிகிறது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8