பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய புராணக்கதை : திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் . அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் . கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போது சிவபெருமான் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்து அருளாசி வழங்கினார். கோவில் சிறிய அளவு தான் எனினும் மிக்க அமைதியையும் தெளிவையும் இப்பவழக் குன்று உங்களுக்கு தரும். திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
பூவாடை சித்தர் பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ...
-
சங்கிலிபூதம் அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார். மானான மகா...
-
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை” என்கின்றனர். *சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி ...
-
தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்த...
-
சவுபரி முனிவர் சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இ...
Thursday, January 10, 2013
திருவண்ணாமலை பவழக்குன்று
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
these all pictures are very nice and very natural… ... I really love these paintings. it's amazing
Thank You Comments, Thanks Comment, Thank You Graphics
Post a Comment