Populer Artikel

Saturday, January 2, 2016

நவகண்ட ரிடி

நவகண்ட ரிடி 
இவர் வடகாஞ்சி தென்கிழக்கில் சோழவள நாட்டில் வாழ்ந்தவர்.இவரைக் காண அசுவினி தேவர் போன்ற ஆதிசித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். மலையமுனி ரிடி அவர் வாழ்ந்த பகுதியை அரசாட்சி செய்துள்ளார். ஆட்சி புரியும் காலத்தில் மும்மாரி மழை பொழிந்ததாகவும் அவர் ஆட்சி புரிந்த நாட்டை மலையரசன் நாடு என்று போற்றினர். இவரது திறமையைக் கண்டு நவகண்ட ரிடி பல உபதேசங்களை வழங்கியதாகவும் அன்று முதல் தனது குடும்பத்தையும் சிம்மாசனத்தையும் விட்டு சமாதி கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

துவாபர ரிடி

துவாபர ரிடி


அகத்தியர் இவரை பற்றி இவருக்கு லட்சம் சீடர்கள் உண்டு என்றும் இவரை கண்டவர்கள் யாரும் இல்லை என்றும் இவர் விண்ணுலக சித்தர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் கூட இவரை காண்பது அறிது என்றும் பிரம்மா  திருமால் போன்றவர்கள் கூட காண முடியாதவர் என்றும் கூறுகிறார். அவரை காண வேண்டுமென்றால் தென்திசையில் இருக்க கூடிய நாதர்கள் தர்மம் செய்திருந்தால் ஒரு வேளை காணலாம் என்கிறார். மனோன்மணியாள் கடாச்சம் இருந்தால் யுகாந்த ரிடியை காண முடியும். மாநிலத்தில் நான் கண்ட பெரும் சித்தர் அவரே என்கிறார்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8