Populer Artikel

Thursday, March 31, 2016

சங்க முனிவர்


சங்க முனிவர்
தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர்கள் யோகம் செய்வதற்கும் முலிகைகளை பயன்படுத்துவதற்கும் ஏற்ற இடமாக சதுரகிரி மலை அமைந்துள்ளது. அந்தவிதத்தில் சதுரகிரியின் அருகில் முத்துமலை என்ற ஒருமலை உண்டு. முத்துமலையின் வடக்கில் பத்மனாபன் காவும் மலையருவியும் கருங்கானலும் உண்டு. அந்த கானலுக்குள் கடுந்தவத்தை மேற்கொண்டு வாழ்ந்தவர் சங்கமுனிவர். சங்கமுனிவர் வாழ்ந்த பகுதிக்கு மேற்கே மலைச்சரிவில் சித்தர்கள் நீராடக்கூடிய சுனை உள்ளது. அந்த சுனை அடுப்புககூட்டினாற் போல் இருக்கும். அந்த சுனையில் அரிய வகை முலிகை ஒன்று உள்ளது அதன் பெயர் சந்திரப்பூடு அது முன்று அடி உயரத்தில் எருமையின் நாவைப் போன்று இருக்கும். 

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8