Populer Artikel

Saturday, June 28, 2014

முதலியப்பர் ஜீவசமாதி திருப்பெருந்துறை


திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோவிலின் பின் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது.இக்குளத்தின் பின் பகுதியில் இச்ஜீவசமாதி அமைந்துள்ளது.இச்ஜீவசமாதியே புலஸ்தியரின் ஜீவசமாதி என்று எனது குருநாதர் கூறினார்.இவ்வூர் மக்கள் புலஸ்தியரை முதலியப்பர் என்று கூறுவது வழக்கம் என்றும் புலஸ்தியருடன் அவரது சீடர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்கள் தபசு செய்த இடம் என்றும் கூறினார்.இவ்விடம் ஏரி கரை ஓரத்தில் அமைந்துள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இது உள்ளது.

இவ்விடத்தில் முதலியப்பர் யோகநிலையில் இருப்பது போன்று சிலை உள்ள்து.அதற்கு கீழ் சதுர ஆவுடை அமைந்துள்ளது.இந்த ஆவுடை ஆத்மநாதரின் ஆவுடை போன்றே அமைந்துள்ளது.இங்கு வணங்க வருபவர்கள் எந்த வித பூசை பொருள்களையும் சாத்த கூடாது.குறிப்பிட்ட ஒரு வகை இலையை மட்டுமே அவருக்கு இட வேண்டும்.இவ்விலை ரகசியமானது.இந்த இடத்திற்கு செல்வோருக்கு திரும்பிவர மனமிராது.அவசியம் கண்டு களிக்க வேண்டிய யோகபூமி.இவ்விடம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Friday, June 27, 2014

சித்தரின் ஜீவசமாதி கீழாச்சேரி


பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வடகாடு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் கீழாச்சேரி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிகவும் பழமையான புராதாண காலத்து ஈஸ்வரன் கோவில் உள்ளது.கோவிலின் சிவலிங்கமும் நந்தியும் மிகவும் பழமை வாய்ந்தது.ஆதியில் இக்கோவில் மண்ணில் புதைந்து இருந்ததாகவும்  இச்சிவலிங்கத்தை ஆடாத செக்கு என்றும் அசையாத அம்மி என்றும் கூறுவர்.தற்சமயம் இச்சிவலிங்கம் வெளிப்பட்டு அனைவரும் வணங்கும் வண்ணம் உள்ளது.இப்பகுதி வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது.இச்சிவலிங்கம் ஆதியில் அங்கு வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி என்றும் கூறுவர்.சித்த மார்க்கத்தில் செல்வோர் இத்தன்மையை நன்கு உணரலாம்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8