Populer Artikel

Wednesday, February 11, 2015

திருமூலரிடி உபதேசம் கூறல்


அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிகபேர்கள் உண்டு என்று கூறுகிறார் . சதாகாலமும் அவரைச் சுற்றி அநேக சித்தவர்க்கம் வீற்றிருப்பர் என்றும் பாரினிலே மூலவர்க்கத்தார்கள் கோடிக்கணக்கில் இருப்பர் என்றும் கூறுகிறார்.

"மூலராந் திருமூல ரிடியார்தாமும்
முனையான சீஷவர்க்க மானபேர்க்கு
காலனது வுபதேசஞ் சொல்லுவார்பார் "

"பாலன்னம் நீரையது பகுந்துவுண்ணும்
பாங்கான கதைபோல சீஷவர்க்கம் "

"அதிதமாம் ஞானோப தேசம்பெற்று
வவனிதனி லிருப்பவரே சித்தராகும் "

"கதிதமாம் மண்டபத்தை சுற்றியல்லோ
காட்சியுடன் வீற்றிருப்பார் சித்தர்வர்க்கம் "

"பதிதமாந் திருமூல வர்க்கத்தார்கள்
பாரினிலே யிருப்பார்கள் கோடியாமே "

பிருகு முனி

பிருகு முனி
பிருகு முனி பிரம்மனால் உருவாக்கப்பட்டார் என்று புராணங்கள் கூறுகிறது. அவருக்கு குரு அவருடைய தந்தையே . கடுமையான தவத்தின் பிரதிபலனால் இறைத்தன்மையை உணர்ந்து கொண்டார் . தவத்தின் ஒவ்வொரு படியிலும் பலபல கேள்விகள் எழுந்துள்ளன இருந்தும் கடுந்தவத்தினால் இறைத்தன்மையைப் பெற்றார். 


பிருகு முனி ஒளித்தன்மை பெற்றார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் எனில் நாம் செய்ய வேண்டியது கடுந்தவமே.  கடுந்தவத்தால் மட்டுமே அவரை அணுக இயலும் மற்றல்லாது புறச்செயல்கள் பயன்தராது . இது சற்று கடினமானதுதான் என்னை பொறுத்த வரையில் அவர் மீது அநேக விருப்பம் கொண்டால் நம்முடைய முயற்சிகள் யாவும் அவரை சார்ந்ததாக அமைவதால் அவர் நம் மீது இரக்கம் காட்டகூடும் காரணம் எதுவெனில் அவர் கருணையே வடிவானவர். 

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8