Populer Artikel

Saturday, January 31, 2015

திருமூலர் மதியமிழ்தம்

 
திருமூல நாயனார்
திருமூல நாயனார்

ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலரில்லை

ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே



தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே




இறவாத  நிலை அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம்
அறிவாற்றல் அறிவென அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருட்டுணையால் அறிவார் பலரில்லை சிலரே யாவர்.

Monday, January 12, 2015

காகபுஜண்டர் வாசியோகம்-vaasiyogam


சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்


சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8