Populer Artikel

Friday, October 21, 2016

பாண்டிய நாட்டு சித்தர்கள்- பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவர்
பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள  உறுதியாகி விராலிமலையின் சுனை அருகில் இருக்கும் பரஞ்சோதி முனிவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து ஞான உபதேச நூலைக் கேட்டனர். பரஞ்சோதி முனிவரும் அவர்களுக்கு தந்து பொதிகை மலையில் பல காலங்கள் வாழ்ந்ததாக அறியமுடிகிறது.

Sunday, October 16, 2016

புலிப்பாணி சித்தர்


புலிப்பாணி அய்யாவின்குருபூசை நாளில் பதினெட்டு சித்தர்களின் ஆசியும் நாதர்கள் மற்றும் இரிடிகளின் யோக அப்பியாசத்தை பெற்றும் எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமானின் அருளாசினை பெற்றும் நலமுடன் வாழ புலிப்பாணி அய்யாவை வேண்டிக் கொள்வோம்.

Monday, October 3, 2016

தவநிதி முனிவர்



இவர் வாழ்ந்த பகுதி கும்பகோணம் அருகில் உள்ள திருவைகாவூர் ஆகும். திருவைகாவூரில் உள்ள சிவாலயத்திற்குள் பல காலங்கள் தவம் மேற்கொண்டார். அப்படி அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தவத்தில் இருந்த பொழுது வேடன் ஒருவன் மானை துரத்தி கொண்டு அவ்வாலயத்திறகுள்புகுந்தான். மான் முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. இதனை கண்ட வேடன் முனிவர் மீது கோபம் கொண்டு அவரை தாக்க நினைத்தான். உடனே சிவபெருமான் புலிரூபம் எடுத்து அவ்வேடனை துரத்தினார். அவன் பயந்து ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒர் இரவு பொழுதை களித்தான்.
வேடனைத் தேடி கொண்டு வேடனின் மனைவி அங்கு வந்து சேர்ந்தாள்.வேடனின் மனைவிக்கு அப்புலி மானாகவே தென்பட்டது. உண்மையை உணர்ந்த வேடன் சிவபெருமானையும் முனிவரையும் வணங்கி முக்தி பெற்றான்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8