Populer Artikel

Tuesday, February 17, 2015

பூதமகாரிடி



பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் கூறுகிறார் . நீண்ட சடைமுடியுடன் தம்பிரான் போலிருப்பார் என்றும் துவாபர யுகத்தில் கேணிதனில் இறங்கி கடும் யோகத்தில் இருந்ததாகவும் அதன் மூலமாக கடும் சித்துக்களை பெற்றதாகவும் தாமும் அது போன்ற சித்துகளை பெறவில்லை என்றும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இவர் கடவுளுக்கு ஒப்பானவர் என்றும் சதாகாலமும் வாசியோகம் செய்து கொண்டே இருப்பார் என்றும் அவரை யோகரிடி மற்றும் காலாங்கி நாதர் போன்ற சித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர் என்று அகத்தியர் கூறுகிறார் 

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8