Populer Artikel

Sunday, February 15, 2015

திருப்பெருந்துறையில் அகத்தியர்

அகத்தியர் பல தலங்களை வழிபட்டு விட்டு திருப்பெருந்துறையில் தவமெற்றியதாக பழங்கால நூல் ஒன்று கூறுகிறது . அதில் அகத்தியர் லோபா முத்திரையுடன் சென்றதாக அந்நூல்கூறுகிறது 
திருப்பெருந்துறையில் குருந்தவனத்திற்குள் அகத்தியர் நுழைந்தவுடன் குருந்தவன முனிவர்கள் அகத்தியரை வரவேற்று மகிழ்ந்ததாகவும் அப்பாடல் கூறுகிறது மாணிக்கவாசகருக்கு முன்பே குருந்தவனம் புனிதமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது


வேண்டும்பல வரமீந்தயன் மீண்டான்றன துலகில்
பாண்டங்கியே மொழிமாதுலோ பாமுத்திரை யோடும் 
ஆண்டுஞ்சில நாள்வைகிய கன்றலய மெங்குங்
கோண்டங்கில பிறையாற்றெழக் குறுமாமுனி குறுகி

வந்தித்துயர் குந்தத்திரு வடிவாமரன் றன்னைச் 
சந்தித்தடி தாழத்திகழ் சதுர்வேதபு றன்னைச் 
முந்நுற்றன னம்மாநகர் முதுவேதிய ரெவரும்
கொந்துற்றெமு மகிழ்வோடெதிர் கோலித்தொமூதுய்ந்தார்

நான் எழுதிய வல்லக்கோட்டையார் மனசாரம்

என் பாதிரி கோட்டைக்குள்  பாசம் மாறா வீற்றிருக்கும் 
கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா 
என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா
குற்றமாறா உன் குருஅருள் தந்து நாளெல்லாம் 
உன் அடிமறவா ஆனந்தம் தர வா வா

நான் குணங்கெட்டேன் உன் குருவருளும் பெறக் கெட்டேன் 
உன் கூறுவேள் கொண்டு குழவுதமிழில் பாடக்கெட்டேன்
பகிரதனுக்கு பண்பு காட்டிய பரந்தாமா
உன் பாசமெனும் பக்தியில் பரவெளியில் பண்பு காட்ட வரந்தாமே
பாதிரியின் கீழ் அமர்ந்த பரலோகா
என் பத்து வாசலையும் அவிழ்த்திட வரந்தாமே

கோட்டை வாழ் ஆண்டவா


கச்சி ஏகம்பன்

அடியவருக்காக தன்னையே வளைத்து கொடுக்கும் கச்சி ஏகம்பன்

ஒருமுறை ஏகம்பனை காணச் சென்றபோது இச்சிற்பம் என் கண்ணில் தென்பட்டது மிக அருமையான சிற்பம் இச்சிற்பத்தின் மூலமாக நாம் பல உண்மைகளை அறிய முடிகிறது அடியவருக்காக ஈசன் இரங்கி வரும் தத்துவச்சிற்பமாக உள்ளது

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8