In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை” என்கின்றனர். *சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி ...
-
பரஞ்சோதி முனிவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள உறுதியாகி வ...
-
நாடியே தென்மேற்கு வடபாகத்தில் நளினமுள்ள மையிநாக னென்னுமேரு கூட்டியே மையினாக சித்தரப்பா கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது தேடியே பர்வத...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
"முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சக்தியடா மனந்தானே யோக மாகத் தனித்...
-
இவர் தாமிரபரணி பகுதியில் வாழ்ந்தவர் . ஆற்றின் பாதாள பகுதிக்குள் மண்டபம் இருந்ததாகவும் அங்கு வருணரிடி தவம் ஏற்றியதாகவும் கூறப்படுகிறது ...
-
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. ம...

Thursday, January 10, 2013
திருவண்ணாமலை பவழக்குன்று
பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் : அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஓர் சிறிய புராணக்கதை : திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் . அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் . கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போது சிவபெருமான் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்து அருளாசி வழங்கினார். கோவில் சிறிய அளவு தான் எனினும் மிக்க அமைதியையும் தெளிவையும் இப்பவழக் குன்று உங்களுக்கு தரும். திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது
Subscribe to:
Posts (Atom)