Populer Artikel

Wednesday, June 22, 2016

புலத்தி்ய முனிவர்

புலத்தி்ய முனிவர்

"நாடிடுமினிக்கேள் மகாராஜ யோகம்
நாட்டுவேன் வைராக்ய ஞானம்
நடத்தை யென்றறிய வாசியோகத்தில்
நற்குறி விளங்கவும் நடத்தை
தேடும் பூரகத்தில் முப்பத்திரண்டு
சிவ ரேசகம் பதினாறு
தெளிந்த கும்பகத்தி லறுபத்துநாலு
திருத்தமாய்த் தீருமிவ் விதமாய்க்
கொடுதப் பாமற சுழிமுனை மேவிக்
குறித்திரு கண்ணது மேவுங்
குப்பியும்வாசி ஔியது வீசும்
குறிப்பதாம் ஔியினிற் கூடிக்
கூடுமே இதுதான் மகராஐ யோகம்
கொண்டு மாத்திரைக்கொரு தீட்டிச
கோருமே யிதுபாா் தலைசுற்றி நொடிக்கக்
குறித்த மாத்திரைமிவ் வகையே."

புலத்தி்ய முனிவர் மேற்குத்த பாடல்களிலிருந்து மூச்சை உள் அடக்குவதும் ராஜயோகம் .அல்ல என்றும்.ராஜயோகம் என்றால் வாசியைக் கும்பித்து ஔியினிற் கூடவேண்ம் எனவும் சுழிமுனை  மேவவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Monday, June 20, 2016

முருகப் பெருமான்

முருகப் பெருமான்

"தானடா தானிருந்து தவசு செய்து
சத்தி வடிவேலுருவம் பெற்றேன் அங்கே
கோனடா குருமலையைப் போலே மைந்தா
குவலயத்தில் மற்றுமொறு கிாிதான் ஏது ."

முருகப் பெருமான் வாழ்ந்த காலகட்டத்தில் யோகக்கலைகளைப் பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது.  முருகப்பெருமான் யோகத்தால் வடிவேல் உருவம் பெற்றதாகவும் அதை கண்டு மக்கள் அதிசயத்துடனும் அவர் மேல் கோபம் கொண்டும் பல இன்னல்களை தந்துள்ளனர். இதனால் முருகப்பெருமானின் சாபத்திற்கு ஆளாகி இன்றும் வேலை நாக்கில் குத்திக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. மக்களுக்கு அஞ்சி குன்றுகளில் தஞ்சம் அடைந்து சதாகாலமும் யோகநிலையில் மேல் நிலைக்கு சென்றதாக அறியமுடிகிறது. 

Wednesday, June 15, 2016

சூரிய சித்தர்

சூரிய சித்தர்

இவர் வாழ்ந்தது நர்மதா நதிக்கரையில்.இவர் சதாகாலமும் தவசு செய்து கொண்டே இருப்பார். வெகுகோடி மாண்பர்கள் வந்தாலும் இவரை காண்பது அரிதாம். சிங்கங்களும் புலிகளும் இவர் வாழ்ந்த பகுதியில் உலாவி கொண்டே இருக்குமாம். பல மிருகங்கள் வாழ்ந்த இருண்ட காட்டுப் பகுதியில் இவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. வானவர்களும் தேவர்களும் கூட வந்து உலாவும் நீண்ட வனமாகவும் சுரிய சித்தர் வாழ்ந்த பகுதி இருந்ததாம்.

Thursday, June 9, 2016

இடைக்காடாா்


இடைக்காடாா்

இடைக்காடாா் சித்துதாமும் யெழில்பொிய 
காட்டகத்தின் மரத்தின்பொந்தில்
திருந்தவே சிவயோக நிலையிற்சென்று
தீா்க்கமுடன் கண்ணிரண்டு மூடலாகி
பருந்துமுதல் காகங்களிருந்திட்டாலும்
பாலருக்கு யாதொன்றும் தோன்றாமற்றான்
அருந்தவத்தி லிருந்துகொண்டு லவனிதன்னை
அப்பனே மறந்தசித்த ரானாா்காணே.

Wednesday, June 8, 2016

வலஞ்சுழி

பலகோடி ரிஷிகள் வழிபட்ட அர்புத சிவ லிங்கங்கள் ஒரே கோவிலில் அமைந்துள்ளன. காலத்தால் முற்பட்டதாகவும் சுயம்பு வடிவமானதாகவும் அத்திருக்கோவில் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது. அவ்வூர் திருவலஞ்சுழி ஆகும். வலஞ்சுழி சென்றால் சிவபெருமானின் அருளைப் பெறுவது உறுதி. ஞானசம்பந்தர் மற்றும் பல அடியார்கள் வழிபட்ட அற்புத திருவூர்.


Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8