Populer Artikel

Monday, May 5, 2014

பராசர முனிவர்-திருப்பெருந்துறை-குருந்தவனம்

பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.

பூவாடைச் சித்தர்-விமல மலை

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.

பூவாடை சித்தர்

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக போகர் கூறுகிறார்.அவர் வாழ்ந்த அந்த பகுதியில் அதிக மலர்கள் இருக்கும் என்றும் மலர்களின் மணம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும் என்றும் போகரின் மலைவாகடத்தில் கூறப்பட்டுள்ளது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8