Populer Artikel

Monday, November 2, 2015

காஞ்சி முனிவன் ராமானுசன்

ராமானுசன்


ராமானுசர் தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஓரிகை என்னும் கிராமம். இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....


சொப்பண துக்கமல கருவாவான்
பார்பண சாபமகற்ற துணையாவான்
முன்னை வினைதோசமகல கருவாகும்
எம் ராமநுசன் பீடைபல போக்கும்
மருந்தாவானே...
 என்று கூறுகிறார்.

 சிவவாக்கிய சித்தர் அவரைப் பற்றி....

மெய் வருத்தந் தீர்ப்பான்
இடும் பைச்றுப்பானி ன்னம்
கல்வி மேன்மை யீவான் கல்வி
தேர்ந்தார்க்கு பணி தந்து பான்மை
தந்து பொன்தந்து ஆயுளுங்
கொடுப்பானாம்...
 ன்று கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர், அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப் பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.

Sunday, November 1, 2015

சிவப்பிர்ம மகரிஷி

சிவப்பிர்ம மகரிஷி

இவர் மளையாள மாநிலத்தில் சபரிமலை செல்லும் சாலையில் ஆரியன்காவு வனப்பகுதியில் வாழ்ந்தவர். அந்த காவுக்குள் அநேக ரிஷிகள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. காயச்சித்தி தரக்கூடிய மூலிகைகளை உண்டு அநேக சித்தர்கள் ஆரியன்காவுக்குள் வாழ்ந்ததாக அரிய முடிகிறது. அக்காலத்தில் ஆரியன்காவு சிறந்த தவ வனமாக விளங்கியது.

Sunday, March 1, 2015

வருணமகாரிடி


இவர் தாமிரபரணி பகுதியில் வாழ்ந்தவர் . ஆற்றின் பாதாள பகுதிக்குள்  மண்டபம் இருந்ததாகவும் அங்கு வருணரிடி தவம் ஏற்றியதாகவும் கூறப்படுகிறது . வருணரிடியை காணவேண்டுமென்றால் ஆற்றின் தலைவாசலில் இருந்து கொண்டு வயிரவனை பூசித்தால் பாறை திறந்து அவரை காணமுடியும்.

ரிடிகளில் இவரே மிகவும் தேர்ச்சி பெற்ற பெரியவர் . ரிடியாருக்கு பூதங்கள் பணிகள் செய்வதாகவும் பூமிக்குள் ஒடுங்கி சதாகாலமும் நிஷ்டையில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இவர் மூப்பகற்றி சோதிப்பிரகாசம் போல் தபத்தில் இருக்கும்பொழுது சித்தர்கள் இவரை காண வந்ததாகவும் ரிடியார் கண் திறந்தபோது சித்தர்கள் அவரைக் கண்டு நடுங்கி போனதாகவும் பின்பு அஞ்சலிகள் மிகவும் செய்து அவர் மடி வணங்கி வானசாஸ்திர நூல்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அவருடைய சில குறிப்பிடத்தக்க நூல்கள் ;

  • நட்சத்திர மாலை
  • கணிதநூல் சாஸ்திரம்
  • பஞ்சாங்க கணிதவேதம்
  • வானநூல் சுருக்கம்
  • பூமிநூல் ஆயிரம்
  • சுகர்பதி எண்ணாயிரம்
  • பஞ்சபச்சி வினாடி கிரகந்தம்


போன்ற நூல்களை பாடிவைத்ததாகவும் அவரிடத்திலிருந்து சித்தர்கள் நூலினைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது .சில நூல்களை மட்டும் சித்தர்கள் வெளியிட்டதாகவும் மற்றவற்றை மறைத்து போட்டதாகவும் அறியமுடிகிறது.

Wednesday, February 25, 2015

தமிழகத்தில் சித்தர்கள்


சாதிகள் உருவாகிய விதத்தை அகத்தியர் தன் பாடலில் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்

அகத்தியரின் குரு அஸ்வினி தேவர் அதனை தனக்கு கூறியதாகவும் கூறுகின்றார் . 

அக்காலத்தில் சித்தர்கள்  பலபல தொகுப்புகளாக வாழ்ந்துள்ளனர் . அப்படி வாழ்ந்த சித்தர்கள் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இருந்துள்ளனர் .

முதல் வர்க்கம் நாதாக்கள் இவர்கள் அறுபது பேர்கள் இவர்களே முதன்முதலில் கற்பமுண்டவர்கள் இதில் ஞானம் பெற்றவர்கள் எண்பது பேர்கள்.

அடுத்தது கம்பிளியான் தொகுப்பைச் சார்ந்தவர்கள் நூறு சித்தர்கள் என்றும் கோனார் தொகுப்பில் நூறு சித்தர்கள் என்றும் அதில் நுட்பம் பெற்ற சித்தர்கள் இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார்.

கண்ணடியர் என்ற தொகுப்பில் ஆயிரம் சித்தர்கள் இருந்ததாகவும் ரோமர் என்ற தொகுப்பில் நாநூறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கொங்கிணியர் என்ற தொகுப்பில் இருநூறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.

தமிழகத்தில் கண்டாமகரிஷியர் என்ற தொகுப்பும் இருந்துள்ளது . இவர்களை அகத்தியர் நாதர்கள் என்று கூறுகிறார் 

பவுஷமகரிஷி கூட்டம் விடலாபுரி என்ற பகுதியில் வாழ்ந்ததாகவும் குளிகை உண்ட பெரிய சித்தர்கள் இருநூறு பேர்கள் என்றும் கூறுகிறார் 

குடகுமலை பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு மூப்பனார் என்று பெயர் இவர்கள் நாநூறு பேர்கள் ஆகும் 

அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர் கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் மறவர் தொகுப்பில் முன்னூறு சித்தர்கள் என்றும் நாயனார் கூட்டத்தில் நூற்றுப்பத்து சித்தர்கள் இருந்ததாகவும் கூறுகிறார்


கஞ்சமலை பகுதியில் வாழ்ந்த சித்தர்களுக்கு ஒசக்கூட்டத்தார் என்று பெயர்  இவர்களை அக்காலத்தில் முனிக்கூட்டம் என்று அழைப்பர் தற்போது இவர்களை நாம் பூசாரிகள் என்று அழைக்கிறோம்

Tuesday, February 17, 2015

பூதமகாரிடி



பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் கூறுகிறார் . நீண்ட சடைமுடியுடன் தம்பிரான் போலிருப்பார் என்றும் துவாபர யுகத்தில் கேணிதனில் இறங்கி கடும் யோகத்தில் இருந்ததாகவும் அதன் மூலமாக கடும் சித்துக்களை பெற்றதாகவும் தாமும் அது போன்ற சித்துகளை பெறவில்லை என்றும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இவர் கடவுளுக்கு ஒப்பானவர் என்றும் சதாகாலமும் வாசியோகம் செய்து கொண்டே இருப்பார் என்றும் அவரை யோகரிடி மற்றும் காலாங்கி நாதர் போன்ற சித்தர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர் என்று அகத்தியர் கூறுகிறார் 

Sunday, February 15, 2015

திருப்பெருந்துறையில் அகத்தியர்

அகத்தியர் பல தலங்களை வழிபட்டு விட்டு திருப்பெருந்துறையில் தவமெற்றியதாக பழங்கால நூல் ஒன்று கூறுகிறது . அதில் அகத்தியர் லோபா முத்திரையுடன் சென்றதாக அந்நூல்கூறுகிறது 
திருப்பெருந்துறையில் குருந்தவனத்திற்குள் அகத்தியர் நுழைந்தவுடன் குருந்தவன முனிவர்கள் அகத்தியரை வரவேற்று மகிழ்ந்ததாகவும் அப்பாடல் கூறுகிறது மாணிக்கவாசகருக்கு முன்பே குருந்தவனம் புனிதமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது


வேண்டும்பல வரமீந்தயன் மீண்டான்றன துலகில்
பாண்டங்கியே மொழிமாதுலோ பாமுத்திரை யோடும் 
ஆண்டுஞ்சில நாள்வைகிய கன்றலய மெங்குங்
கோண்டங்கில பிறையாற்றெழக் குறுமாமுனி குறுகி

வந்தித்துயர் குந்தத்திரு வடிவாமரன் றன்னைச் 
சந்தித்தடி தாழத்திகழ் சதுர்வேதபு றன்னைச் 
முந்நுற்றன னம்மாநகர் முதுவேதிய ரெவரும்
கொந்துற்றெமு மகிழ்வோடெதிர் கோலித்தொமூதுய்ந்தார்

நான் எழுதிய வல்லக்கோட்டையார் மனசாரம்

என் பாதிரி கோட்டைக்குள்  பாசம் மாறா வீற்றிருக்கும் 
கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா 
என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா
குற்றமாறா உன் குருஅருள் தந்து நாளெல்லாம் 
உன் அடிமறவா ஆனந்தம் தர வா வா

நான் குணங்கெட்டேன் உன் குருவருளும் பெறக் கெட்டேன் 
உன் கூறுவேள் கொண்டு குழவுதமிழில் பாடக்கெட்டேன்
பகிரதனுக்கு பண்பு காட்டிய பரந்தாமா
உன் பாசமெனும் பக்தியில் பரவெளியில் பண்பு காட்ட வரந்தாமே
பாதிரியின் கீழ் அமர்ந்த பரலோகா
என் பத்து வாசலையும் அவிழ்த்திட வரந்தாமே

கோட்டை வாழ் ஆண்டவா


கச்சி ஏகம்பன்

அடியவருக்காக தன்னையே வளைத்து கொடுக்கும் கச்சி ஏகம்பன்

ஒருமுறை ஏகம்பனை காணச் சென்றபோது இச்சிற்பம் என் கண்ணில் தென்பட்டது மிக அருமையான சிற்பம் இச்சிற்பத்தின் மூலமாக நாம் பல உண்மைகளை அறிய முடிகிறது அடியவருக்காக ஈசன் இரங்கி வரும் தத்துவச்சிற்பமாக உள்ளது

Wednesday, February 11, 2015

திருமூலரிடி உபதேசம் கூறல்


அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிகபேர்கள் உண்டு என்று கூறுகிறார் . சதாகாலமும் அவரைச் சுற்றி அநேக சித்தவர்க்கம் வீற்றிருப்பர் என்றும் பாரினிலே மூலவர்க்கத்தார்கள் கோடிக்கணக்கில் இருப்பர் என்றும் கூறுகிறார்.

"மூலராந் திருமூல ரிடியார்தாமும்
முனையான சீஷவர்க்க மானபேர்க்கு
காலனது வுபதேசஞ் சொல்லுவார்பார் "

"பாலன்னம் நீரையது பகுந்துவுண்ணும்
பாங்கான கதைபோல சீஷவர்க்கம் "

"அதிதமாம் ஞானோப தேசம்பெற்று
வவனிதனி லிருப்பவரே சித்தராகும் "

"கதிதமாம் மண்டபத்தை சுற்றியல்லோ
காட்சியுடன் வீற்றிருப்பார் சித்தர்வர்க்கம் "

"பதிதமாந் திருமூல வர்க்கத்தார்கள்
பாரினிலே யிருப்பார்கள் கோடியாமே "

பிருகு முனி

பிருகு முனி
பிருகு முனி பிரம்மனால் உருவாக்கப்பட்டார் என்று புராணங்கள் கூறுகிறது. அவருக்கு குரு அவருடைய தந்தையே . கடுமையான தவத்தின் பிரதிபலனால் இறைத்தன்மையை உணர்ந்து கொண்டார் . தவத்தின் ஒவ்வொரு படியிலும் பலபல கேள்விகள் எழுந்துள்ளன இருந்தும் கடுந்தவத்தினால் இறைத்தன்மையைப் பெற்றார். 


பிருகு முனி ஒளித்தன்மை பெற்றார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் எனில் நாம் செய்ய வேண்டியது கடுந்தவமே.  கடுந்தவத்தால் மட்டுமே அவரை அணுக இயலும் மற்றல்லாது புறச்செயல்கள் பயன்தராது . இது சற்று கடினமானதுதான் என்னை பொறுத்த வரையில் அவர் மீது அநேக விருப்பம் கொண்டால் நம்முடைய முயற்சிகள் யாவும் அவரை சார்ந்ததாக அமைவதால் அவர் நம் மீது இரக்கம் காட்டகூடும் காரணம் எதுவெனில் அவர் கருணையே வடிவானவர். 

Saturday, February 7, 2015

திருமூலரிடியார்

திருமூலர் எப்படி இருப்பார் என்று பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் நமக்கு அந்த பாக்கியம் இல்லை இத்தகைய அரிய பாக்கியத்தை அகத்திய சுவாமி அருளி உள்ளார்
திருமூலர் தளிரான ரோமம் உடலெங்கும் கொண்டவராகவும் நிண்ட சடையுடன் சிவபெருமானை போல் இருப்பார் என்றும் படிகநிறம் போன்று உடல் வண்மை கொண்டவராகவும் இருப்பார் என்று அகத்திய சுவாமி கூறுகிறார் 

 ''நலமான திருமூலரிடியார்தாமும்
தளிரான ரோமமது முன்னூர்பாகம்
சடையுடனே தம்பிரான் போலிருப்பார் ''

''பளியான ரிடியாரும் படிகம்போலே
பாங்குடனே வீற்றிருக்கக் காணலாமே ''

Saturday, January 31, 2015

திருமூலர் மதியமிழ்தம்

 
திருமூல நாயனார்
திருமூல நாயனார்

ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலரில்லை

ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே



தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே




இறவாத  நிலை அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம்
அறிவாற்றல் அறிவென அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருட்டுணையால் அறிவார் பலரில்லை சிலரே யாவர்.

Monday, January 12, 2015

காகபுஜண்டர் வாசியோகம்-vaasiyogam


சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்


சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்

Friday, July 4, 2014

திருப்பெருந்துறை சித்தர் காரப்பெரிய நாயினார்

சித்தர் காரப்பெரிய நாயினார்
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விடம் உசிலை மர வனமாக உள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.இச்சித்தருடன் ஏராளமான சீடர்கள் இருந்ததாக தெரிகிறது.இவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் இப்பகுதி எங்கும் பரவி கிடக்கின்றன.சித்தரின் ஜீவசமாதி பீடம் சதுரவடிவாக உள்ளது.பீடத்திற்கு பின்புறம் தற்போது நாகத்தின் சிலை வைக்கப்பட்டுள்ளது.


தீர்த்தாண்டதானம் இராமர் கோவில்


தீர்த்தாண்டதானத்தில் இராமபிரான் தங்கி இருந்து தபசு மேற்கொண்ட மற்றொரு பகுதி முத்துகுடா.இவ்வூர் தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் உள்ளது.தீர்த்தாண்டதானம்,முத்துகுடா,சுந்தர பாண்டிய பட்டிணம் இவை யாவும் திருப்புணவாயிலுக்கு அருகில் உள்ளது.திருப்புணவாயிலில் இருந்து திருப்பெருந்துறை 20 கி.மீ தொலைவில் உள்ளது.முத்துகுடா இராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்படாத கோவில்.இராமரின் உருவம் மட்டும் கருங்கல்லில் உல்ளது.இது கோவில் போன்ற அமைப்பில் உள்ளது.இதனுடைய விளக்கம் சரியாக எனக்கு புரியவில்லை.

Thursday, July 3, 2014

தீர்த்தாண்டதானம் சித்தர் ஜீவசமாதி


தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.அகஸ்தியர் திருப்புனவாயிலின் தபசில் இருந்த பொழுது இராமபிரான் அப்பகுதியில் வருவதை உணர்கிறார்.பின்பு இராமரை சந்தித்து தீர்த்தாண்டதானத்தில் இருக்கும் இறைவனை வழிபடுமாறு கூறுகிறார்.இராமரும் அங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை வழிபடுகிறார்.



கோவிலின் பின் பகுதியில் உள்ள சித்தரின் ஜீவசமாதி பீடம் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் காணப்படுகிறது.இச்சித்தரின் திருவுருவம் கோவிலின் பின்பகுதியில் தவக்கோலத்தில் இருப்பது போன்றும் அருகில் ஒரு மரம் மற்றும் பசு அருகில் இருப்பது போன்றும் சிற்பமாக அமைந்துள்ளது.

இராமபிரான் தீர்த்தாண்டதானத்தில் இருந்து தபசு மேற்கொண்டார் என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு.தீர்த்தாண்டதானத்திற்கு அருகில் சுந்தர பாண்டிய பட்டிணம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் இராமபிரான் தபசு செய்த இடம் உள்ளது.அங்கு இராமரின் பாதம் உள்ளது.இக்கோவில் மிகவும் சிதலமடைந்துள்ளது.இவ்விடம் மிகவும் புதர் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.




Saturday, June 28, 2014

முதலியப்பர் ஜீவசமாதி திருப்பெருந்துறை


திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோவிலின் பின் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது.இக்குளத்தின் பின் பகுதியில் இச்ஜீவசமாதி அமைந்துள்ளது.இச்ஜீவசமாதியே புலஸ்தியரின் ஜீவசமாதி என்று எனது குருநாதர் கூறினார்.இவ்வூர் மக்கள் புலஸ்தியரை முதலியப்பர் என்று கூறுவது வழக்கம் என்றும் புலஸ்தியருடன் அவரது சீடர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்கள் தபசு செய்த இடம் என்றும் கூறினார்.இவ்விடம் ஏரி கரை ஓரத்தில் அமைந்துள்ளது.தபசு செய்வதற்கு ஏற்ற இடமாகவும் இது உள்ளது.

இவ்விடத்தில் முதலியப்பர் யோகநிலையில் இருப்பது போன்று சிலை உள்ள்து.அதற்கு கீழ் சதுர ஆவுடை அமைந்துள்ளது.இந்த ஆவுடை ஆத்மநாதரின் ஆவுடை போன்றே அமைந்துள்ளது.இங்கு வணங்க வருபவர்கள் எந்த வித பூசை பொருள்களையும் சாத்த கூடாது.குறிப்பிட்ட ஒரு வகை இலையை மட்டுமே அவருக்கு இட வேண்டும்.இவ்விலை ரகசியமானது.இந்த இடத்திற்கு செல்வோருக்கு திரும்பிவர மனமிராது.அவசியம் கண்டு களிக்க வேண்டிய யோகபூமி.இவ்விடம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Friday, June 27, 2014

சித்தரின் ஜீவசமாதி கீழாச்சேரி


பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வடகாடு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் கீழாச்சேரி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிகவும் பழமையான புராதாண காலத்து ஈஸ்வரன் கோவில் உள்ளது.கோவிலின் சிவலிங்கமும் நந்தியும் மிகவும் பழமை வாய்ந்தது.ஆதியில் இக்கோவில் மண்ணில் புதைந்து இருந்ததாகவும்  இச்சிவலிங்கத்தை ஆடாத செக்கு என்றும் அசையாத அம்மி என்றும் கூறுவர்.தற்சமயம் இச்சிவலிங்கம் வெளிப்பட்டு அனைவரும் வணங்கும் வண்ணம் உள்ளது.இப்பகுதி வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது.இச்சிவலிங்கம் ஆதியில் அங்கு வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி என்றும் கூறுவர்.சித்த மார்க்கத்தில் செல்வோர் இத்தன்மையை நன்கு உணரலாம்.

Saturday, May 10, 2014

உதயகிரிச் சித்தர் -சதுரகிரி-மாவூற்று

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

உதயகிரிச் சித்தர்

சதுரகிரி மலை அடிவாரத்தில்  தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும்.

அந்த மாவூற்றானது சிவபெருமான் சடா மகுடத்திலிருந்து சித்தர்களுக்காக ஒரு துளி தீர்த்தத்தை விட அத்துளி ஊற்றாகி நாளடைவில் பெரிய குளமாக ஆகியது.அதில் தீர்த்தமாடினால் அநேக பாவங்கள் நீங்கும்.

ஏனென்றால் இந்தத் தலத்தில் அநேக முனிவர்கள், ரிஷிகள் கேட்டு கொண்டதற்காக சிவபெருமான் கிருபை கூர்ந்து மகாலிங்க மூர்த்தியாக தரிசனம் கொடுத்து கொண்டிருப்பதால் புண்ணிய தலமாக உள்ளது மாவூற்று.

அந்த மாவூற்றுக்கு வடப்பக்கம் இருக்கிற உதயகிரியில் நேர்வடக்காக மலைமேல் அம்பிடும் தூரம் போனால் குகையிருக்கிறது.அந்த குகையில் உதயகிரிச் சித்தர் இருக்கிறார் என்று கோரக்கர் தன் மலைவடாகத்தில் கூறுகிறார்.

Friday, May 9, 2014

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.

பூபால முனிவர்

பூபால முனிவர் வாழ்ந்த பகுதி பூரிமலை ஆகும்.சிவத்தியான முனிவர் குகையிலிருந்து நேர்கிழக்காக வருகிற பாதையில் வந்து வடக்கே போகிற பாதையில் அரை நாழிகை வழி தூரம் வந்தால் அனேக மரங்கள் சூழ்ந்த வனம் என்றும் அங்கு நெல்லி மரங்கள் அனேகமிருக்கிறது என்கிறார் கோரக்கர்.அந்த மரம் பெரியதாக இருக்கும் என்கிறார்.

அந்த வனத்துக்கு கீழ்பக்கம் வருகிற பாதையில் அரைவழி தூரத்தில் ஓடை இருக்கிறது என்கிறார்.அந்த ஓடையில் கூப்பிடும் தூரம் போனால் அனேக மரஞ்செடிகொடிகள் சூழ்ந்த வனத்தின் மேல்பக்கம் உள்ள பகுதியில் பூபால முனிவர் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்க முனிவர் கூறுகிறார்.

Tuesday, May 6, 2014

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர்

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர் பூரிமலைக்கு வடபுரம் சிங்குளமென்ற கீழ் பொத்தையருகே பரமேஸ்வரன் கோவிலுண்டு.அதிலே மூன்று சுனைகள் உண்டு என்றும் தெற்குபக்க சுனையருகே தென்பக்கம் வருகிற பாதையில் ஒரு நாழிகை தூரம் வந்த பின் வடபக்கம் வருகிற பாதை வழியாக வந்தால் உச்சமலை இருக்கிறது.அந்த மலைக்கு வடக்கு பக்கம் வருகிற பாதை வழியே மலையோரமாய் வந்தால் சரிவில் சிவத்தியானவர் வாழ்ந்த குகை இருக்கிறது என்று கூறுகிறார்.

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர்

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர் தன் மலைவாகடத்தில் கூறிவுள்ளார்.திருவனந்தபுரத்திற்கு வடக்கிழக்கே ஒரு நாழிகை வழி தூரத்திற்கப்பால் பூரிமலை என்று செம்மண் தரைகளாய் இருக்கும்.அங்கு மிளகு செடிகள் அதிகமாக விளைந்திருக்கும்.அதன் வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் பெரிய வனம் ஒன்றும் தென்பக்கம் அமுத மகா ரிஷி வாழ்ந்த பகுதி இருக்கிறது என்று கோரக்கர் கூறுகிறார்.

Monday, May 5, 2014

பராசர முனிவர்-திருப்பெருந்துறை-குருந்தவனம்

பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.

பூவாடைச் சித்தர்-விமல மலை

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.

பூவாடை சித்தர்

பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ்ரமம் இருந்ததாக போகர் கூறுகிறார்.அவர் வாழ்ந்த அந்த பகுதியில் அதிக மலர்கள் இருக்கும் என்றும் மலர்களின் மணம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருக்கும் என்றும் போகரின் மலைவாகடத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 4, 2014

சவுபரி முனிவர்-திருப்பெருந்துறை

சவுபரி முனிவர் திருப்பெருந்துறை.

சவுபரி முனிவர்

சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இருந்தார்.அப்போது தன் குஞ்சுகளோடு மகிழ்ந்து திரிந்த ஒரு மீனை பார்த்து தானும் இவ்வாறு திகழ வேண்டுமென்று கருதி துருவாசரிடம் வழி கேட்க அவர் திருப்பெருந்துறையில் இருக்கும் மானவ தீர்த்தத்தில்  உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.இவரை பற்றிய குறிப்புகள் திருப்பெருந்துறை வரலாற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Thursday, May 1, 2014

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலிபூதம்

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு வாவென்று அழைக்க சங்கிலிபூதம் ஆசிர்வதிக்கும் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்க மளிக்கும் என்று கூறுகிறார்.

Wednesday, April 30, 2014

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.மாணிக்கவாசகரின் காலத்திற்கு முன்பே திருப்பெருந்துறை புகழ்பெற்று விளங்கியது.இத்தலம் பாண்டிய நாட்டுக்கு உட்பட்டது.இங்கு ஓடும் வெள்ளாறு பெருமை மிக்கது.சூத முனிவர் நைமிசாரணியத்தில் வாழும் முனிவர்கள் வேண்ட திருப்பெருந்துறையின் வரலாற்றினை கூறினார்.புரூரவச் சக்கரவர்த்தி முதற்கண் ஆத்மநாதர் என்னும் சொற்பொருளை விளக்க வேண்டும் என  தவுமியரை வேண்ட அவர் ஆத்மாவின் விளக்கத்தை கூறி அவ்வாத்மாவுக்கு நாதராய் விளங்குதலால் ஆத்மநாதர் என விளக்கி கூறினார்.

Tuesday, April 29, 2014

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி-நாக மலை

அசுவதா ரிஷி  வாழ்ந்த பகுதி  பொதிகை  மலை.அம்மலையின்  பக்கத்தில்  நாக மலை உள்ளது.அம்மலையின் அடிவாரத்தில்  நாதாக்கள் வாழ்ந்தனர்.அவர்கள்  அங்கு வரும் மனிதர்களுக்கு  காயகல்ப  மருந்துகளை  தந்து உதவினர்.நாக மலையின்  கிழக்கு  பகுதியில்  ஓடை ஒன்றும் மாமர விருச்சதின் அடியில் அசுவதா ரிஷி வாழ்ந்ததாக  கூறபடுகிறது.அவருடன் கமலமுனியும் இருப்பதாக அகஸ்தியர் கூறுகிறார். திருமூல வர்க்கத்தார்கள் காப்பியம் 4000 தை அசுவதா ரிஷியிடம் தந்து அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும்  உள்ளது. 

Sunday, April 27, 2014

Sathuragiri sandeeshvara munivar-சண்டீஷ்வர முனிவர்

sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.

sandeeshvara munivar

sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.siddhars are going to meet sandeeshvara munivar and asked sandeeshvara munivar's plum leaf(KAVIYAM 1000).he gave his all plum leaf to siddhars.sandeeshvara munivar told to siddhars if you study all these plum leaf, you must reach peerinpa nilai.THIRUMOOLA VARKKATHAR bought this plum leaf from sandeeshvara munivar

Saturday, April 26, 2014

Dharukavana rishi-தாருகாவனரிஷி -பழனி வராககிரி

பழனி வராககிரி தாருகாவன ரிஷி வராககிரிக்கு மேலே வந்தால் ஒரு நாழிகை தூரத்தில் பூங்காவனம் இருக்கிறது.

Dharukavana rishi

Dharukavana rishi lives in kurumpa nadu at poothigai malai, its a forest.its have mandabam near by big falls
its dharukavana rishi meditation area.its contains lot of sandal trees.siddhars came to see him and do asdanga poojai.on top of that mandapam Dharukavana rishi always in meditation think about siva and he teach other siddhars.dharukavana rishi place name is called dharukavanam.lot of elephants and forest dogs are there in that place.dharukavana rishi lves many years in dharukavanam afterwards he teach to poothigai malai agasthiyar.dharukavana rishi hiding sendura kalpam in dharukavanam.

பழனி வராககிரி தாருகாவன ரிஷி வராககிரிக்கு மேலே வந்தால் ஒரு நாழிகை தூரத்தில் பூங்காவனம் இருக்கிறது.அந்த பூங்காவனத்தின் மேல் பக்கம் இரண்டு நாழிகை தூரத்தில் குடப்பாறையும் அப்பாறைக்கு மேற்காக அரை நாழிகை தூரம் போனால் தாருகாவனம் இருக்கிறது.
அந்த வனத்தின் மத்தியில் தாருகாவனத்து ரிஷியின் ஆஸ்ரமம் இருந்ததாக கோரக்கர் கூறுகிறார்.

Friday, April 25, 2014

Jenaga munivar

 jenaga munivar lives mountain in shozhavala nadu.AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga munivar staying mountain have seven falls, thousand steps in top.

jenaga munivar

 jenaga munivar lives mountain in shozhavala nadu.AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga munivar staying mountain have seven falls, thousand steps in top. on the top it have cave he lives in that cave.agathiyar says every step siddhars stay.this mountain contains lot of siddhars its called as siddhars fort.siddhars collect  and save lot of thiraviyangal.kali and bairavar secure that  thiraviyangal. this mountain also called jenaga muni kottai.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8